கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள்
பொள்ளாச்சி: 13-08-2013 அன்று பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “ 4200 தர இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊதியத்திற்கு இணையாக 9300-34800 +4200 தரஊதியம் வழங்க வேண்டி” அரசின் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார தலைவர் ம.ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ம.கார்த்திகேயன் வரவேற்புரை நல்கினார்.
மாவட்டத்தலைவர் திரு.மயில்சாமி அவர்கள் கோரிக்கை விளக்க உரையில் பல்வேறு ஊதியக்குழுக்களில் இடைநிலை ஆசிரியர்கள் பெற்ற விகிதங்களை ஒப்பிட்டு விளக்க உரை ஆற்றினார். சு.மாரிமுத்து மற்றும் சு.கணேசன் ஆசியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ச.நிவாஸ், இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்பொழுது ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பேசும்போது, பழைய ஊதியவிகித்ததில் பெற்ற ஊதியத்தை ஒப்பிட்டாலும் தற்பொழுது பெறும் ஊதியம் 2205 இழப்பு மற்றும் மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் தற்பொழுது 8550 இழப்பு என்பது குறித்து விளக்கி, தமிழக அரசு உடனே மத்திய அரசிற்கு இணையான ஊதியவிகிதமான 9300-34800 மற்றும் தர ஊதியம் 4200 வழங்கவேண்டும் என வலியுறுத்திப்பேசியதுடன் நன்றியரை வழங்கினார்.
விழாவிற்கு அனுமதியும் பாதுகாப்பும் வழங்கிய காவல்துறைக்கும், 14.08.2013 நாளிதழ்களில் செய்தி வெளியிட்ட தினமலர் மற்றும் தினகரன் பத்திரிக்கை நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..
Unity is strength
ReplyDelete