Monday 26 August 2013

செப்டம்பர் 5 - கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்- சில பயனுள்ள யோசனைகள்

செப்டம்பர் 5 - கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்- சில பயனுள்ள யோசனைகள்

1) மாவட்டத் தலைநகர்களில் உரிய காவல்துறை முன் அனுமதி பெறவேண்டும்.
2) மாவட்டத்தொடக்கககல்வி அலுவலர்களுக்கும் உரிய கடிதம் அனுப்பப்படல் வேண்டும்.
3) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தில் சரியான நேரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தொடங்கப்படவேண்டும்.
4) ஆசிரியர்களை வட்டார அளவில் திட்டமிட்டு இரு குழுக்களாக பிரித்து ஒருகுழுவினரை பிற்பகல் தற்செயல் விடுப்பு எடுத்து சரியான நேரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தொடங்கச் சென்றுசேருமாறு வட்டார பொறுப்பாளர்கள் திட்டமிடல் நலம்.
5) அடுத்த குழுவினர் பள்ளி முடிந்தவுடன் உடனடியாக பயணித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது கலந்துகொள்ள திட்டமிடல் நலம்.
6) ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் வந்து சேர்ந்து நிகழ்ச்சி நிரல் முடியும் வரை அனைத்து ஆசிரியர்களும் இருக்குமாறு செய்ய வட்டார பொறுப்பாளர்கள் திட்டமிடல் வேண்டும்.
7) போரட்டத்தின் பலன் சென்றடைய உள்ள இடைநிலை ஆசிரியர் ஒருவர் கூட தவறாது மூத்த ஆசிரியர்களுடன் கலந்து கொள்ளவதை பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
 கடந்த 50 ஆண்டுகாலமாக பல்வேறு போரட்டக் களங்களை அமைத்து அனுபவம்மிக்க நமது பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி ஐயா அவர்களின் வழிகாட்டுதலினால் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடர்போரட்டங்களில் கலந்து கொள்ளும் எவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வாராது என்பதினை விளக்கி அனைத்து சங்க உறுப்பினர்களையும் இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளச் செய்து போராட்டத்தினை வெற்றி பெறச்செயவது நமது கடமை.

No comments:

Post a Comment